மனிதர்களுக்கிடயே போட்டி, பொறாமை, பொய் வேஷம் போடும் இந்த காலத்திலும், எந்த வேஷமும் போடாமல் மனிதர்கள் கூடவே கலந்து அவர்களின் நன்றியினை மட்டுமே உணர்ந்து நம் எல்லோர் வாழ்வியலில் நிறைந்து அன்பினை உணர்த்தும் இந்த ஜீவன்கள் ஓர் அற்புதங்கள் , எத்தனையோ உறவுகள் நமக்கு இருந்தாலும் நட்பாகவும், பாசமாகவும், காவலாகவும், சில நேரங்களில் கவலைகளுக்கு மருந்தாகவும் நம் உள்ளார்ந்த உதிரத்தைத் தொடும் உண்மை உள்ளம் கொண்ட இந்த ஜீவராசிகள் ஓர் அதிசயங்கள். இந்த ஜீவன்கள் உளமார்ந்த உத்தமத் தன்மையை வெளிப்படுத்துவதில்லாமல் மனித வாழ்வை மேம்படுத்தவும் செய்கின்றன. இப்படியான இந்த ஜீவன்கள் கடவுளின் படைப்பின் ஓர் அரிய பொக்கிஷங்கள்.