உலகப் பொது மறை திருக்குறளாம்
முப்பால் தந்திட்ட திருக்குறளாம்
வாழ்க்கையின் உண்மையை
உரைக்கும் திருக்குறளாம்
உலகம் போற்றும் திருக்குறளாம்
வள்ளுவர் தந்த திருக்குறளாம்
நெஞ்சம் மகிழ்ந்திடும் திருக்குறளாம்
தெய்வப் புலவர் தந்த திருக்குறளாம்
பாரதம் போற்றும் திருக்குறளாம்
பாப்பா பாப்பா கதை கேளு
அன்பாய் நீயும் கதை கேளு
அறிவாய் நடக்க கதைகேளு
பண்பை வளர்க்க கதை கேளு
வாதம் வம்பு அழிக்க கதை கேளு
நேர் வழியில் நடக்க கதை கேளு
நீதியைக் கற்று நீ வளர
நித்தம் ஒரு கதை கேளு
தாய்மொழியாம் தமிழ் மொழி
முக்கனிச்சுவை கொண்ட மொழி
மூவேந்தர் ஆண்ட மொழி
வள்ளுவர் தந்த பொதுமறை மொழி
முப்பால் தந்த அருமை மொழி
பெருமை சேர்த்த செம்மொழி
அற்புத மொழியை வளர்த்திடுவோம்
அன்னை மொழியைக் காத்திடுவோம்!
© 2025 Vivekananda Educational Trust (VET) – All Rights Reserved